tamilnadu

img

தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப். 4- தொழிலாளர் விரோத பட் ஜெட்டைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக, தனியார் முதலாளிகளுக்கு பெரும் செல்வத்தை அள்ளி கொடுக்கும் பட்ஜெட்டாக அறிவித்துள்ளது. மேலும், விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணாத ஏழைகளை ஏறி மிதிக்கும் பட்ஜெட் ஆக வும், கோடிக்கணக்கான முறை சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூ தியம் வழங்காமல் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவ னங்களை விற்பனை செய்யும் பட் ஜெட் ஆகவும், பல்வேறு தொழி லாளர்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் சீரழிக்கும் பட்ஜெட்டாக, மத்திய அரசின் புதிய பட்ஜெட் உள்ளது. இதனை கண்டித்து நாமக்கல் மற்றும் தரும புரியில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, தொலைபேசி நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், மாநில செயலா ளர் சி.நாகராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.அங்கம்மாள், சி. கலாவதி பொருளாளர் ஏ.தெய் வானை ஆகியோர் கோரிக் கையை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் 
நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உதவிச் செயலாளர் கு.சிவராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் ந. வேலுசாமி, மாவட்டத் தலைவர் கே.சிங்காரம், மாவட்ட துணை செயலாளர் எல்.ஜெயக்கொடி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.