tamilnadu

img

தியாகி பன்னீர்செல்வம் 22ஆவது நினைவுதினம் திருப்பூரில் எழுச்சியோடு கடைப்பிடிப்பு

திருப்பூர், மார்ச் 17- திருப்பூரில் பனியன் தொழிலா ளர்களை சங்கமாக அணிதிரட்டி உரிமைப் போராட்டத்தை முன்னெ டுத்ததற்காக முதலாளியால் கூலிப்ப டையை ஏவிபடுகொலை செய்யப் பட்ட தியாகி ஆர்.பன்னீர்செல்வத்தின் 22ஆவது நினைவு தினம் எழுச்சி யோடு கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம் பாளையம் புதூர் பேருந்து நிறுத்தம் முன்பிருந்து செவ்வாயன்று மாலை தியாகி பன்னீர்செல்வம் நினைவு ஊர்வலம் புறப்பட்டது. கேத்தம் பாளையத்தில் தியாகி பன்னீர் செல்வம் நினைவிடத்தின் அருகே ஊர் வலம் நிறைவடைந்தது. அங்கு நடை பெற்ற நினைவஞ்சலி நிகழ்ச் சியில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக் கூர் ராமலிங்கம் மலர் வளையம் வைத்து தியாகி பன்னீர்செல்வத்துக்கு வீர வணக்கம் செலுத்தினார். இதைத் தொடர்ந்து கட்சி அணியினர், ஜீனா கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தி னர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற  நினைவு தினப் பொதுக் கூட்டத் திற்கு பிச்சம்பாளையம் புதூர் கிளைச் செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப் பினர்கள் கே.தங்கவேல், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாதர் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் சி.பானுமதி, கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.என். நடராஜ், சிஐடியு பனியன் தொழிற் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத், மார்ச்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றி யச் செயலாளர் கே.பழனிசாமி, ஆகி யோர் உரையாற்றினர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்,  பனியன் தொழிலாளர் சங்க தலைவர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ் ணன் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக பிச்சம்பாளையம் புதூர் கிளை உறுப்பினர் சாமியப் பன் நன்றி கூறினார்.

இதேபோல் வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் நகரக் கிளை களில் தியாகி பன்னீர்செல்வம் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து, நினைவஞ்சலி செலுத்தப் பட்டது. இந்நிகழ்வில் வேலம்பாளை யம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிர மணியம், மாவட்டக் குழு உறுப்பினர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பி னர்கள் அ.உமாநாத், பி.பாபு, பி.சின்னச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.