tamilnadu

அணுக்கழிவு: தமிழிசை கண்டுபிடிப்பு

திருநெல்வேலி, ஜுன் 16- கூடங்குளம் அணுக்கழிவு மையத்தால் ஆபத்தில்லை என்ற ‘புதிய கண்டுபிடிப்புடன்’ அர சியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டி வருவதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அது அணுக்கழிவு கூட  கிடையாது என்றும் எரிபொரு ளின் மிச்சம் என்றும் கூறப்படுவ தாகவும் தெரிவித்தார். ஒரு அணு உலையில் இருந்து 7 ஆண்டு களுக்குப் பிறகே அணு கழிவுகள் அகற்றப்படும் என்றும் கூடங்குளத்தை பொறுத்தவரை அதற்கு இன்னும் நாட்கள் இருப்ப தாகவும் அவர் கூறினார்.