வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வங்கக் கடலின் வடக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முதலில் வடக்கு நோக்கியும், பின்னர் வடமேற்கு திசையை நோக்கியும் நகர வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சீரான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.