tamilnadu

img

ஆதிவாசி மக்களுக்கு எதிரான ‘வனத்திருத்தச் சட்டம் 2019’ திரும்ப பெறச் செய்வோம்! -பெ.சண்முகம்

ஆதிவாசிகள் நலனில் அக்கறை கொண்ட 20க்கு மேற்பட்ட அமைப்புகள் ஜூலை 1 ஆம் தேதி புதுதில்லியில் கூடி, உச்சநீதிமன்ற உத்தரவுக்கெதிராகவும், திருத்தச்சட்டத்தை திரும்பபெற வேண்டுமென்று வலியுறுத்தி ஜூலை 22ஆம் தேதி நாடு முழுவதும் கண்டன போராட்டங்களை நடத்திட அறைகூவல் விடுத்துள்ளன. ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய மேடை, அகில இந்திய விவசாயிகள் சங்கம் இப்போராட்டத்தில் முனைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கூட்டாக இப்போராட்டத்தை நடத்துகிறது.

மத்திய பி.ஜே.பி.அரசு வனங்களில் வாழும் ஆதிவாசி மக்களுக்கு எதிராக இந்திய வனச்சட்டம் 1927ல் பல்வேறு திருத்தங்க ளை கொண்டு வரும் வகையில் 7.3.2019 அன்று இந்திய வனச் சட்டம் திருத்த மசோதா 2019 வெளியிடப்பட்டுள் ளது. இது நிறைவேற்றப்படுமானால் பல்லாண்டுகாலம் போராடி பெற்ற வனஉரிமைச் சட்டம் 2006ஐ முட மாக்கும் மத்திய பிஜேபி அரசின் சதித்திட்டம் நிறை வேறும் என்பதை ஆதிவாசி மக்கள் உணர வேண்டும்.  பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்காலத்தில் நிறை வேற்றப்பட்ட “இந்திய வனச்சட்டம் 1927” - ஐத்தான் 2006ம் ஆண்டு வரை இந்திய அரசு அடிப்படைச் சட்ட மாகக் கொண்டிருந்தது. இந்தச் சட்டத்தை வைத்துக் கொண்டே 1972ம் ஆண்டு கானுயிர் பாதுகாப்புச் சட்டம், 1972ம் ஆண்டு வன (திருத்தச்) சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், 1980, வனப்பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் 1988 போன்ற சட்டங்கள் மூலம் மக்களை வனத்தி லிருந்து வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடர்ந்தது. மக்களிடமிருந்து காடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துத் தளத்திலேயே அரசின் வனக் கொள்கைகளும், சட்டங்களும் இயற்றப்பட்டு வந்தன.

இதே காலத்தில் நாட்டில் பல பகுதிகளில் பழங்குடி மக்களின் வலுமிக்க பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதன் விளைவாக இந்திய வனத்துறை அமைச்சகம் 1990 செப்டம்பர் 19 அன்று ஒரு வழிகாட்டும் உத்தரவை வெளியிட்டது. (எண் 13-1/90 - FP Date 18.9.1990) அதில் “25.10.1980க்கு முன்பாக ஆக்கிரமிக்கப்பட்டு மக்களின் அனுபவத்தி லிருந்து உரிமை கோரியிருந்தால் அத்தகைய வன நிலங்களை மாநில அரசுகள் முறைப்படுத்தி ஒப்படை செய்யலாம்” என்று தெரிவித்தது. வனப்பாதுகாப்பு சட்டம் 1980 - 25.10.1980 முதல் நடைமுறைக்கு வந்த தால் மேற்படி தேதியை வரையறையாக நிர்ணயித்த னர். பழங்குடி மக்களுக்கு சாதகமான இந்த உத்தரவு தமிழகத்தில் எள்முனையளவு கூட அமல்படுத்தப் படவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதுதான் நிலை.  இந்த உத்தரவு அமல்படுத்தப்படாத நிலைமை களை எல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் 23.11.2001 அன்று “30.9.2002க்குள் வன நிலங்களில் உள்ள ஆக்கிரப்பாளர்கள் வெளியேற்றப் பட வேண்டும்” என்று உத்தரவிட்டது.  - இப்படி வர லாறு நெடுகிலும் அரசும், நிர்வாகமும், நீதித்துறையும் ஆதிவாசி மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள் ளன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

மக்களை காத்த இடதுசாரிகள்

இத்தகைய நிலையில்தான் 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவுடன்தான் அரசு அமைய முடியுமென்ற அரசியல் சூழல் ஏற்பட்டது. இந்த வாய்ப்பை மக்களுக்குச் சாதகமாக பயன்படுத்த இடதுசாரி தலைவர்கள் திட்ட மிட்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் எந்தத் திட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச செயல்திட்டம் உரு வாக்கப்பட்டது. அதில் ஒரு அம்சம், பழங்குடி மக்களை காடுகளிலிருந்து வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பதும், அவர்களின் காடு களின் மீதான பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கும் விதத்தில் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதும் ஆகும். காடுகளிலிருந்து மக்களை வெளியேற்றும் உத்தரவு 2004 ஜூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. பழங்குடி மக்களின் (காடுகளின் மீதான உரிமைகள் பாது காப்பு) மசோதா 2005 மத்திய அரசால் 2005, டிசம்பர் 13ந் தேதி நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அதில் “பல தலைமுறைகளாக அனைத்து விதமான வனநிலங்களின் மீது உரிமை கொண்டிருந்த காடு களில் வசிக்கும் பழங்குடி பிரிவினரின் காடுகளின் மீதான உரிமையை அங்கீகரித்து அவர்கள் உயிர் வாழ்வதற்கு காட்டு நிலங்களின் மீதான நியாயமான தேவையையும், காட்டினை அடிப்படையாகக் கொண்ட ஆதார வளங்களை பயன்படுத்துவதற்கான தேவை யையும், அடிப்படையான அம்சமாகக் கொண்டதாகவே இந்தச் சட்டம் திகழும்” என குறிப்பிட்டிருந்தது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இந்திய நாட்டில் முதன்முறை யாக ஆதிவாசிகளுக்கும், வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தினருக்கும் மிகச் சாதகமாக வரலாற்றில் முத்திரை பதிக்கத்தக்க சட்டம் 2006 டிசம்பர் 15ந் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வரலாற்றில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இச்சட்டத்தின் மூலம் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உருவானது.

ஆனால், ஆதிவாசி மக்களுக்கு உரிமைகள் வழங்கும் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய - மாநில அரசுகள் அக்கறை செலுத்தவில்லை. தமிழ்நாட்டை பொறுத்த வரை உயர்நீதிமன்றத்தின் தவறான உத்தரவு காரணமாக சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை இருந்தது. 2016 பிப்-02ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில்தான் சட்டம் அமல்படுத்த இருந்த தடை நீக்கப்பட்டது. இருப்பி னும், சட்டத்தை அமல்படுத்துவதில் அதிமுக அரசு தீவிரம் காட்டவில்லை.

வன உரிமைச்சட்டம் அமலான விதம்

31.3.2019 வரை நாடுமுழுவதும் வன உரிமைச் சட்டம் 2006ன் படி உரிமை கோரிய தனி நபர்கள் 40,89,035 சமூகத்திற்கான மனுக்கள் 1,48,818 ஆக மொத்தம் 42,37,853 மட்டுமே. இதில் உரிமை வழங்கப் பட்டது. தனி நபர்கள் 18,87,894 சமூகம் 76,154 ஆக மொத்தம் 19,64,048 மட்டுமே. உரிமை கோரி மனுச் செய்தவர்களில் சுமார் 45 சதவீதமானோருக்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டது. ஆனால் 87.72 சதவீத மனுக்கள் முடித்து வைக்கப்பட்டதாக மத்திய சுற்றுசூழல் வனத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதாவது இதர மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்று அர்த்தம். இந்த வனஉரிமைச் சட்டப்படி உரிமை பெற வேண்டியவர்களில் விண்ணப்பித்தவர்கள் சுமார் 40 சதவீதம் மட்டுமே. பெரும்பாலோனோர் விண்ணப் பிக்கவே இல்லை. அதற்கான எந்த முயற்சியையும் ஆட்சியாளர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் 31.3.2019 வரை உரிமை கோரி விண்ணப்பித்தவர்கள் 32,983 பேர். சமூக உரிமை கோரி வந்த மனுக்கள் 1005 ஆக மொத்தம் 33,988 மட்டுமே. இதில் உரிமை வழங்கப்பட்டது 6,387 மட்டுமே. இதுதான் பெரும்பாலான மாநிலங்களில் சட்ட அமலாக்கத்தின் லட்சணம்.

இந்த நிலையில்தான் உரிமை கோரி மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவர்களையெல்லாம் “ஆக்கிர மிப்பாளர்கள்” என்று கூறி உடனடியாக வனத்திலி ருந்து அவர்களை வெளியேற்ற வேண்டுமென்று வனப்பாதுகாவலர்கள், வனவிலங்கு பாதுகாவலர்கள், புலிப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் மீது 2019 பிப் - 13ந் தேதி உச்சநீதிமன்றம் ஆதிவாசி மக்க ளின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் மிக மிக மோசமான உத்தரவை பிறப்பித்தது. “வனஉரிமைச் சட்டப்படி உரிமை கோரி மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் ” என்பதே அந்த உத்தரவு. மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் படாதவர்களெல்லாம் “ஆக்கிரமிப்பாளர்கள்” என்று காலனிய சட்ட மன நிலையிலிருந்து உச்சநீதிமன்றம் கூறியது. மத்திய பழங்குடியினர் அமைச்சகம், இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராவதற்கு கூட முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கெதிராக நாடுமுழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. நாடாளு மன்ற தேர்தலும் வர இருந்த நிலையில் பிப்-28ந் தேதி உச்சநீதிமன்றம் தனது உத்தரவை நிறுத்தி வைத்தது. அதுமட்டுமல்லாமல் மாநில அரசுகள், ஏற்றுக் கொள்ளப்படாத மனுக்கள் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பிரமாணப்பத்திரமாக ஜூலை 10ந் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டுமென்று உத்தர விட்டு வழக்கை ஜூலை 24ந் தேதிக்கு ஒத்திவைத்தது. ஒரு வேளை உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்தால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆதிவாசிகளும், வனத்தை சார்ந்து வாழும் இதர பிரிவி னரும் வெளியேற்றப்பட்டிருப்பர். 24ந் தேதி உச்சநீதி மன்றம் என்ன சொல்லப் போகிறது என்பதை பொருத்தி ருந்து பார்ப்போம்.

மாநில உரிமைகளை பறிக்கும் திருத்தச்சட்டம்

இது ஒருபுறமிருக்க, மத்திய பி.ஜே.பி. அரசு இந்திய வன (திருத்தச்) சட்டம் 2019 என்ற மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த திருத்தச் சட்டத்தில், நாடு முழுவதிலுமுள்ள வனங்கள் முழு வதையும் மத்திய அரசு தனது கையில் எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. வனங்கள் முதலில் மாநில அரசுகளின் அதிகாரத்திலும், பிறகு 1976ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி வனம் மத்திய - மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இப்போது மாநில அரசுக்கு இருக்கும் வனத்தின் மீதான உரிமையை பறித்து மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல இருக்கிறது. வனம் சம்பந்தமாக எந்தவொரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் இனி மாநில அரசு மத்திய அரசின் ஒப்புதலை கட்டாயம் பெற வேண்டும். வன உரிமைச்சட்டம் 2006ல் கிராம சபைக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது. இப்போது வனத்துறை அதிகாரிகளுக்கு முழு அதிகாரமும் வழங்கப்படுகிறது. ஆதிவாசிகள் வனத்தை தங்கள் சொந்த தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் அரசு இப்போது உற்பத்திக்கான வனம் என்ற பெயரில் வன வளங்களை வியாபார ரீதியாக பயன்படுத்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் உள்நாட்டு, பன்னாட்டு கம்பெனிகள் கனிம வளங்களையும், வன வளங்களையும் சுரண்ட முடியும். அத்துடன் வனத்தை அழித்து லாபம் தரக்கூடிய பணப்பயிர்களை உற்பத்தி செய்ய முற்படுவர். காடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவர்.

இவர் வனக் குற்றத்தில் ஈடுபடுபவர் என்று வனத்துறை அதிகாரி முடிவு செய்தால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ஆதாரமின்றி, வாரண்ட் இல்லா மல் எவரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று வானளாவிய அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங் கப்பட்டுள்ளது.  வனசிறு மகசூல்களை சேகரித்து எங்கு வேண்டு மானாலும் விற்றுக் கொள்ளலாம் என்று வன உரிமைச்சட்டத்தில் வழங்கியுள்ள உரிமை பறிக்கப்பட்டு எதை எதை சேகரிக்கலாம் என்பதையும் அதற்கான கட்டணம் என்ன என்பதையும் வன நிர்ணய அலுவலர் தீர்மானிப்பார். இதன் மூலம் ஆதிவாசி சமூகத்திற்கு இருந்த உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளின் தயவிலேதான் அவர்கள் வாழ முடியும் என்ற நிலை. ஆதிவாசிகள் வன உரிமையை நிலை நிறுத்தி கொள்ள நீதிமன்றம் செல்லலாம் என்றால் மாவட்ட நீதிமன்றம் சொல்வதே இறுதியானது. உயர்நீதி மன்றத்திற்கோ, உச்சநீதிமன்றத்திற்கோ மேல்முறை யீடு செய்ய முடியாது என்று திருத்தச் சட்டம் கூறுகிறது. வனத்தை பாதுகாப்பதற்காக பிரதமர் தலைமையில் “தேசிய வனக் கழகம்” என்ற அமைப்பு உருவாக்கப்படு மாம். அதில் ராணுவ தளபதி உட்பட உறுப்பினர்களாக இருப்பார்களாம். இதன் மூலம், ராணுவத்தினர் இந்திய எல்லைகளை காப்பதை விட்டுவிட்டு வனங்களை காக்கப் போகிறார்கள் போலும். வனத்தில் வாழும் மக்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகளை போலவும் அவர்களிடமிருந்து வனத்தை காப்பதுதான் ஆகப்பெ ரும் பணி என்றும் மத்திய ஆட்சியாளர்கள் கருதுகி றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

காடு மக்களுக்கு சொந்தம்

இந்த திருத்தச் சட்டம் நிறைவேறுமானால், வனஉரிமை சட்டம் 2006 ஏட்டளவில் மட்டுமே இருக்கும். வனங்களிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும் அடியோடு இழந்து நிர்க்கதியாக்கப்படுவார்கள், வன வளங்கள் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டு இயற்கை வளம் அழிக்கப்படும்.  எனவே, இந்திய வனம் பாது காக்கப்பட, வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆதிவாசிகள் நலனில் அக்கறை கொண்ட 20க்கு மேற்பட்ட அமைப்புகள் ஜூலை 1 ஆம் தேதி புதுதில்லி யில் கூடி, உச்சநீதிமன்ற உத்தரவுக் கெதிராகவும், திருத்தச்சட்டத்தை திரும்பபெற வேண்டுமென்று வலியுறுத்தி ஜூலை 22ஆம் தேதி நாடு முழுவதும் கண்டன போராட்டங்களை நடத்திட அறைகூவல் விடுத்துள்ளன. ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய மேடை, அகில இந்திய விவசாயிகள் சங்கம் இப்போராட்டத்தில் முனைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கூட்டாக இப்போராட்டத்தை நடத்துகிறது. மத்திய பி.ஜே.பி. அரசின் ஆதிவாசி மக்க ளுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து அணி திரள்வோம். காடு மக்களுக்கு சொந்தம் என்பதை நிலை நிறுத்துவோம்.

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர் 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்