சென்னை,ஏப். 4 கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனத்தினர் முக கவசங்களை வழங்குகிறார்கள். இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் உதவியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் அசாதாரண நெருக்கடியையும் பொருட்படுத்தாது இந்த கொடிய வைரசின் பரவலை திறம்பட கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. நன்றியுணர்வில் ஒரு சிறிய அடையாளமாக காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முககவசம், கையுறைகள் மற்றும் கைகழுவும் திரவம் ஆகியவற்றை வழங்கியுள்ளேன்”. இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.