tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 834 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 834 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக  தற்போது 59918 பேர்  வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 213 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.  இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.