tamilnadu

img

சினிமா பாடகி சுஷ்மிதா தற்கொலை

பெங்களூரு 
கன்னட திரைத்துறையில் முக்கிய பின்னணி பாடகியாக இருக்கும் சுஷ்மிதா ராஜன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சரத்குமார் என்ற மென்பொருள் பொறியாளரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தென் பெங்களூரு பகுதியான குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குறிப்பாக சரத் குடும்பத்தினர் தரப்பில் வரதட்சணை கேட்டு அதிகளவு கொடுமைப்படுத்தியுள்ளதாக்கக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கோபித்துக் கொண்டு அன்னபூர்னேஸ்வரி நகரில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். திங்களன்று தூக்கம் வருவதாகக் கூறிவிட்டு அறைக்கு சென்ற சுஷ்மிதா செவ்வாயன்று காலை வரை அறையிலிருந்து வெளியே வரவில்லை. வழக்கமாக சுஷ்மிதா தாமதமாகத்தான் எழுந்திருப்பார் என அவரது குடும்பத்தினர் அசால்ட்டாக இருந்து விட்டனர். 

பின்னர் தங்கள் மொபைல்போனை எடுத்துப் பார்த்தபோது சுஷ்மிதா அனுப்பியிருந்த தற்கொலை தொடர்பான குறுஞ்செய்தி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் கதவை உடைத்துப் பார்த்தபோது, சுஷ்மிதா தூக்கில் பிணமாகத் தொங்கிக்கொண்டு இருந்தார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 

;