tamilnadu

img

விமான நிலைய தனியார்மயமாக்கலை கைவிடுக!

கேரள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருவனந்தபுரம், ஆக.21- திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை யும் மேற்பார்வையையும் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கேரள அனைத்து கட்சி கூட்டம் கோரியுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில், பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் விமான நிலையம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்தன. சட்ட நடவடிக்கைகள் தொடர்வதோடு இந்த விவகா ரத்தில் ஒன்றுபட்டு செயல்படுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

விமான நிலையத்தின் மேற்பா ர்வை மற்றும் செயல்பாட்டை, கேரள அரசுக்கு முக்கிய பங்குள்ள  ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட நிறு வனத்திடம் (Special Purpose  Vehicle) ஒப்படைக்க வேண்டும் என்று மாநில அரசு  கோரியதாக முதல்வர் தெளிவுபடுத்தினார். இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு 2 முறையும், பிரதமருக்கு மூன்று முறையும்  கடிதம் எழுதியுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். மாநில தலைமைச் செயலாளர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளருக்கு எழுதிய கடித த்தில், கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் மாநில அரசு சார்பாக ஏலத்தில் பங்கேற்றது என்றும், அதானி எண்டர்பிரைசஸ் மேற்கோள் காட்டிய அதே தொகையை வழங்க மாநில அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப் பட்டதாகவும் கூறினார்.

வாக்குறுதியும் பங்களிப்பும்

2003 ஆம் ஆண்டில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மாநில அரசுக்கு அளித்த உறுதிமொழியில், விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு மாநில அரசு அளித்த பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசின் சிறப்பு நோக்க நிறுவனத்திடம் விமான நிலையத்தின் செயல் பாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப் படைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. மாநில அரசுக்கு, கொச்சி சர்வதேச விமானநிலையத்தை பொதுமக்கள் பங்களிப்புடன் வெற்றி கரமாக செயல்படுத்துவதில் அனுபவம் உண்டு. கண்ணூர் சர்வதேச விமான நிலையம் அதே  மாதிரியில் இயங்குகிறது. திரு வனந்தபுரம் சர்வதேச விமான நிலைய மேற்பார்வையும் இயக்க மும் ஏலம் எடுத்த தனியார் தொழில் முனைவோருக்கு அத்தகைய அனுபவம் இல்லை.

2005 ஆம் ஆண்டில் மாநில அரசு, 23.57 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி திருவனந்த புரம் சர்வதேச விமானநிலை யத்தின் வளர்ச்சிக்காக விமான நிலைய ஆணையத்திற்கு இலவச மாக வழங்கியது. மேலும் 18 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட மற்றும் இல வசமாக வழங்கப்பட்ட நிலத்தின் விலையை எஸ்.பி.வி-யில் மாநில அரசின் பங்காகக் கருத வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இது  நடைபெற்றது. ஏற்கனவே திரு வனந்தபுரம் சர்வதேச விமானநிலை யம் திருவிதாங்கூர் சமஸ்தா னத்தால் வழங்கப்பட்ட ராயல் பிளையிங் கிளப்புக்கு சொந்தமான 258.06 ஏக்கர் நிலம் உட்பட 636.57  ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள் ளது. இவை உட்பட மத்திய அரசால் திருத்தப்பட வேண்டிய பிரச்சனை  ளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் விளக்கினார்.

விட்டுத்தர முடியாது

பொதுத்துறையில் இருந்த போது விமானநிலையத்திற்கு வழங்கப்பட்ட உதவிகளை மாநில அரசின் வலுவான கருத்துக்கு மாறாக தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையத்திற்கு நீட்டிக்க முடியாது. உச்சநீதிமன்றத்தின் உத் தரவின்படி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சட்டநடவடிக்கைகளுக்கு தேவையான ஆலோசனையைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட் டுள்ளது. அரசியல் கட்சிகள் ஒரு மித்த கருத்துடன் மாநிலத்தின் நலன் களைப் பாதுகாக்க ஒரு கூட்டு முடிவை எடுக்க வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவ சியம் என்று முதல்வர் கூறினார்.

விமான நிலையம் மாநில அரசு தலைமையிலான அமைப்பாக மாற வேண்டும் என்பது பொது வான உணர்வு. இது நமது நியாய மான தேவையுமாகும். அதைப்பெற வேண்டும் என்பதே நாட்டின் தேவையும். ஒரு கட்டத்தில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. மாநில அரசின் ஒத்து ழைப்பு இல்லாமல் எந்த விமான நிலையத்தையும் இயக்க முடி யாது. வளர்ச்சிக்கு அரசின் உதவி அவசியம். தொழில்துறையை அறி ந்தவர்கள் மாநிலத்திற்கு சவால் விடுவார்களா என்று தெரிய வில்லை. இது மத்திய அரசுக்கு  எழுதிய கடிதத்திலும் நேரடியாக வும் கூறப்பட்டுள்ளது. இது மாநில அரசிடம் ஒப்படைக்கப்படலாம் என்று மிக உயர்ந்த மட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது. அது தற்போது மீறப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை விட்டுத் தர முடியாது. இதில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். பாஜகவின் எதிர்ப்பு தொழில்நுட்ப ரீதியிலா னது. பிரச்சனைகளைப் புரிந்து கொண்டால், அவர்களும் பின் வாங்குவர். ஒன்றுபட்டு நின்றால் நாம் மத்திய அரசின் முடிவை மாற்ற  முடியும். சட்டமன்றத்தில் ஒன்றாக நிற்போம். தலைநகரின் பெருமை யாக இந்த விமான நிலையத்தை மாற்றலாம். சட்டமன்றத்தில் எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் கூறினார்.

கேரள அரசுக்கு பாராட்டு

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா இப்பிரச்சனையில் மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆத ரவைத் தெரிவித்தார். சட்ட மன்றத்தில் ஒரேகுரலாக தீர்மானம் கொண்டுவரவும் அவர் ஆதரவு தெரி வித்தார். மிக முக்கியமான பிரச்ச னையில் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதற்காக கட்சித் தலைவர்கள் அரசுக்கு  பாராட்டு தெரிவித்தனர். காணொலி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, எம்.வி. கோவிந்தன் மாஸ்டர் (சிபிஎம்), தம் பானூர் ரவி (காங்கிரஸ்), அமைச்சர் இ. சந்திரசேகரன், சி. திவாகரன் (சிபிஐ), பி.கே. குஞ்ஞாலிக்குட்டி (முஸ்லீம் லீக்), அமைச்சர் ராமச் சந்திரன் கடனப்பள்ளி (காங்கிரஸ் எஸ்), சி.கே. நாணு (ஜே.டி (எஸ்),  பி.ஜே. ஜோசப் (கேரள காங்கிரஸ்), டி.பி. பீதாம்பரன் மாஸ்டர் (என்.சி.பி), ஷேக் பி. ஹாரிஸ் (லோக் தந்ரிக் ஜனதா தளம்), ஏ.ஏ. அஜீஸ் (ஆர்.எஸ்.பி), ஜார்ஜ் குரியன் (பாஜக), மனோஜ் குமார் (கேரள காங் கிரஸ் ஜே), பி.சி. ஜார்ஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.