tamilnadu

img

முறையாக ஆய்வு செய்யாமல் கோ.பாலசுப்பிரமணியனை நியமித்ததற்கு தமிழக அரசும், ஆளுநரும் தான் காரணம் தமிழ்ப் பல்கலை., ஆசிரியர்- பணியாளர் பேரவை கண்டனம்

தஞ்சாவூர், டிச.22- தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்ப் பல்கலைக் கழக ஆசிரியர் - பணியாளர் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் தலை வர் பி.இளையாப்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பி.பாலச்சந்தி ரன் முன்னிலை வகித்தார். இதில் பேரா சிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கள் குறித்து, பேரவையின் சட்ட ஆலோ சகர் வழக்கறிஞர் தியாக.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்க லைக் கழக துணைவேந்தராக இருந்த கோ.பாலசுப்பிரமணியனை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு தினங்களுக்கு முன் தகுதி நீக்கம் செய் துள்ளது. துணைவேந்தராக நியமிக்கப்பட இருப்பவர்கள் பன்னாட்டு கருத்த ரங்கம் நடத்தி இருக்க வேண்டும். அவர் இரண்டு ஆய்வு கட்டுரைகளை நூலாக வெளியிட்டிருக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால் இதனை கோ.பால சுப்பிரமணியன் செய்திருக்கவில்லை. இவர் சில போலியான ஆவணங்களை வழங்கிய நிலையில், அவரை துணை வேந்தராக தமிழக அரசு நியமனம் செய் துள்ளது. இதற்கு முழுக் காரணம் தமி ழக அரசும், வேந்தராக உள்ள தமிழக ஆளுநரும் தான். அவர்கள் முறையாக ஆய்வு செய்யாமல் கோ.பாலசுப்பிர மணியனை துணைவேந்தராக நிய மித்துள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இனி துணை வேந்தராக நியமனம் செய் யப்பட இருப்பவர்களுடைய தகுதி யையும், பின்புலத்தையும் முழுமை யாக ஆய்வு செய்து, கண்காணித்து அதற்கு ஏற்றார் போல் துணைவேந்த ராக நியமனம் செய்ய வேண்டும். அப்போது தான் பல்கலைக்கழ கத்தின் வளர்ச்சி இருக்கும். இந்த பல்கலைக்கழகம் எந்த நோக்கத்துக் காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதனை செயல்படுத்திட முடியும். இந்த பல்கலைக் கழகத்தில் பேரா சிரியர்கள் நியமனம் குறித்து சில ஊழல் முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குக்கும், துணைவேந்தர் தகுதி நீக்கத்துக்கும் தொடர்பில்லை. துணை வேந்தர் தகுதி ஏற்புடையது அல்ல என கடந்த 2018 நவம்பர் மாதமே உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் பேராசிரியர்கள் நியமன ஊழல் முறைகேடு வழக்கு 2019 ஆகஸ்ட் மாதத்தில் தான் நீதிமன்றத்தில் பதிவாகி யுள்ளது. தன் மீது எழுந்துள்ள வழக்கை திசை திருப்பவே, துணைவேந்தராக இருந்த கோ.பாலசுப்பிரமணியன், ஊழல் முறைகேடு வழக்கை வெளியே எல்லோருக்கும் தெரியும்படி பிர பலப்படுத்தியுள்ளார். துணைவேந்த ராக கோ.பாலசுப்பிரமணியன் பொறுப் பேற்ற நாள் முதல் அவரால் நியமிக்கப் பட்ட பணியாளர்கள் நியமனம் தொடர் பாக நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டுள்ளோம். அந்த தகவல் வந்ததும் இதுகுறித்து வழக்கு தொடரப்படும்”. இவ்வாறு அவர் கூறினார்.