தஞ்சாவூர், அக்.25- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புல அவையத்தில், மொழியியல் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் வியா ழக்கிழமை அன்று நடைபெற்றது. கருத்த ரங்கிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மொழியியல் துறைத் தலைவர் முனைவர் கி.விஸ்வநாதன் வர வேற்றார். மொழிப்புல முதன்மையர் முனை வர் இரா.காமராசு வாழ்த்திப் பேசினார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் இந்திய தேசிய அறிவியல் உயராய்வு மைய பேராசிரியர் அப்பாசாமி முருகையன் கலந்து கொண்டு, ‘’புலம் பெயர் நாடுகளில் இந்திய மொழிகள் தமிழ் மொழி இழப்பு மற்றும் தக்கவைப்பு” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். பேராசிரியர் முனைவர் மா.ரமேஷ்குமார் தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரி யர் முனைவர் ப.மங்கையர்க்கரசி நன்றி கூறினார்.