தஞ்சாவூர் செப்.17-தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கரிகால்சோழன் கலையரங்கில் திங்கள்கிழமை அன்று 39ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் முனைவர் பா.ஜெயக்குமார் வர வேற்றார். துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணி யன் தலைமை வகித்துப் பேசுகையில், “பிற மொழி பல்கலைக் கழகங்களுக்கெல்லாம், தமிழ்ப் பல்கலைக்கழ கமே முன்னோடியாக உள்ளது. இந்த பல்கலைக்கழ கத்தை தஞ்சையில் அமைத்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை நன்றியோடு நினைவு கூருவோம். இப்பல்க லைக்கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட முத லாவது துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியத்தின் சிலை பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும்” என்றார். முன்னாள் துணைவேந்தர் பேரா இ.சுந்தரமூர்த்தி நிறு வன நாள் பேருரையாற்றினார். முதல் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் தஞ்சாவூர் கவிராயர் வாழ்த்திப் பேசி னார். மொழிப்புலத் தலைவர் இரா.காமராசு அறிமுக உரை யாற்றினார். அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை உதவிப் பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன் தொகுப்புரையாற்றி னார். பதிவாளர் (பொ) முனைவர் கு.சின்னப்பன் நன்றி கூறினார்.