tamilnadu

img

தமிழ் தாத்தா உ.வே.சா. நினைவிடத்தில் அஞ்சலி

கும்பகோணம், பிப்.20- உலகம் போற்றும் தமிழ் தாத்தா எனக் கூறப்படும் உவேசா (உத்த மதானபுரம் வேங்கட சுப்பையர் சாமி நாத ஐயர்) 165-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அருகே உள்ள திருவாரூர் மாவட்டம் வலங் கைமான் தாலுகாவில் அவரது சொந்த ஊரான உத்தமதானபுரம் நினைவிடத்தில் உள்ள உருவச் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அன்றைய தஞ்சாவூர் ஜில்லா உத்தமதானபுரம் சூரிய மூளை என்கிற கிராமத்தில் 1855 பிப்ரவரி 19 அன்று வேங்கடசுப்பையர் மக னாக பிறந்தார். அவர் தமிழ் மொழி யின் மீது பற்று கொண்டு பல்வேறு தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆய்வுக ளையும் இலக்கணங்களையும் கண்டறிந்து தமிழ் மொழியின் பெரு மைகளை உலகுக்கு சொன்னவர். இவரது நினைவைப் போற்றும் வகையில் தற்போது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா வில் உத்தமதானபுரம் நினைவு இல்லம் திறக்கப்பட்டு உருவச் சிலை வைத்து நினைவிடம் அமைக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது தமிழ் மொழியைப் போற்றும் வகையில் தமுஎகச உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் இவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் கவிஞர் ஜீவபாரதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜகோபாலன் மேலை நீலமேகம், வாசுதேவன் சி.சண்முகம், பக்கிரிசாமி, தமிழ்ச்செல்வி உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.
குடவாசல்
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத யர் 165-வது பிறந்த நாள் வலங்கை மான் வட்டம் உத்தமதான புரத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தமுஎகச மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் பேரணியாக சென்று அவ ரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமுஎகச வலங்கை மான் வட்டாரத் தலைவர் பால சுந்தரம், செயலாளர் அந்தோணி பாங்கர், பொருளாளர் சின்னத் துரை ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்டப் பொருளாளர் சண்முகம், சங்க உறுப்பினர்கள் மற்றும் சிபிஎம் நகரச் செயலா ளர் சாமிநாதன், வாலிபர் சங்க வலங்கைமான் ஒன்றியச் செயலா ளர் ஜெ.ஜெயராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.விஜய் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தி னர். மேலும் உ.வே.சாமிநாதயர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை போற்றும் வகையில் வலங்கைமா னில் தமுஎகச சார்பாக பிப்.29 அன்று கலை இரவு இசை நிகழ்ச்சி யும் நடைபெறவுள்ளது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் வட்டம் உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சா நினைவு இல்லத் தில் 166-வது பிறந்தநாள் விழா  செய்தி மக்கள் தொடர்புத்துறை யின் சார்பில் நடைபெற்றது. உ.வே. சா உருவச்சிலைக்கு மாவட்ட வரு வாய் அலுவலர் செ.பொன்னம்மாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூர்
தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாதையரின், 166 ஆவது பிறந்த நாள் விழா, அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் உத்தம தானபுரத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழ்த் தாத்தாவின் உருவச் சிலைக்குத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்.  விழாவில் பதிவாளர் (பொ) கு.சின்னப்பன், ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் பா.ஜெயக் குமார், ஓலைச் சுவடித்துறைத் தலைவர் முனைவர் கோவை மணி, துணைப் பதிவாளர் கோ.பன்னீர் செல்வம், நிதி அலுவலர் முனைவர் இரா.உமாமகேசுவரி, உதவிப் பேராசிரியர் முனைவர் கலாதர், ஓய்வு பெற்ற மாவட்டக் கருவூல அலுவலர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.