தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை ஒன்றிய தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கை.கோவிந்தராஜன் (வ.ஊ) முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஒன்றிய தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் பேசுகையில், நலத்திட்டங்கள் நிறைவேற்ற போதிய நிதி இல்லாத நிலை உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மூலம், தமிழக அரசிடம் நிதி பெற்றுத் தர அதிமுக உறுப்பினர்கள் முன்வர வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மஸ்தூர், மருந்து அடிப்ப வர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். நிறைவாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரமேஷ் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கருதி போதிய இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.