tamilnadu

img

பள்ளி ஆசிரியர்கள்  சார்பில் நிவாரணம் 

தஞ்சாவூர், மே 18-  தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கொடிவயல் மரக்காவலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, மாணவர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களின் சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமையாசிரியை ப.தவமணி, ஆசிரியர்கள் பொ.சிங்காரவேலு, ஆசிரியை வேலுத்தாய், மா.கலாராணி, ப.முத்துலட்சுமி, ஜோ.ஆரோக்கிய அமலா, மு.சத்யஜோதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மு.க.பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் என். கார்த்திக், எஸ்.கமால்பாட்சா, வி.கருப்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.