tamilnadu

img

சாலையோரம் ஆதரவற்றுக் கிடக்கும்  மனநலம் பாதித்தவர்களுக்கான கருணைப் பயணம் 

 கும்பகோணம், அக்.8- உலக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தினம் வரும் பத்தாம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி நெல்லையைச் சேர்ந்த பசியில்லா தமிழகம் அறக்கட்டளை யைச் சேர்ந்தவர்கள் 100 நாட்கள் தமிழகத்தில் உள்ள 15 நக ராட்சிகள் மற்றும் புதுச்சேரிக்கு கருணைப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுத்தப்படுத்தி அவர்களுக்கு புத்தாடை அணிவித்து அவர்கள் விரும்பும்பட்சத்தில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். பயணத்தின் ஒரு பகுதியாக அறக்கட்டளையினர், கும்ப கோணம் மகாமகக் குளம் அருகே சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை முடி யை வெட்டி, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்தனர். அவர்களை தஞ்சையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். டிச.6 ஆம் தேதி தங்கள் கருணைப் பயணத்தை சென்னை யில் இக்குழுவினர் நிறைவு செய்ய உள்ளனர். நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயலாளர் இசை மருத்துவர் நெடுஞ்செழியன் சிட்டி யூனியன் வங்கி பொது மேலாளர் பால சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.