தஞ்சாவூர் ஆக.25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி சார்பில் நிலத்தடி நீர் மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் பேரணியை தொடங்கி வைத்தார். தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் முன்னிலை வகித்தார். குமரப்பா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர். துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன், இளநிலை உதவியாளர்கள் ராஜேந்திரன், ராஜேஷ், ஆசிரியர்கள் மூர்த்தி, நீலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.