tamilnadu

img

படத்திறப்பு நிகழ்ச்சி

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அருகே உள்ள ஒதியடிக்காடு கிராமத்தில், கம்யூனிச இயக்கத் தியாகி வாட்டாகுடி இரணியன் சகோதரி சிவபாக்கியம் அம்மையார் படத்திறப்பு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி உருவப் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மதுக்கூர் பெரியசாமி, ஒதியடிக்காடு காந்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.வேதையன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

;