கும்பகோணம், பிப்.8- முதுமலை தெப்பக்காட்டில் தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மலைவாழ் ஆதிவாசி சிறுவனை காலணியை கழற்றி விட சொல்லி அவமானப்படுத்தியதையும், ஒருமையில் பேசி அழைத்ததையும் கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜீவபாரதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளர் செல்வமணிபகத்சிங், சிபிஎம் பொறுப்பாளர்கள், ஓய்வூதியர் சங்கம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சியினர் பங்கேற்றனர்.