வாலிபர் அடித்துக் கொலை
தஞ்சாவூர், ஜூன் 6-தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த குளிச்சப் பட்டு கீழ ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ராதா மகன்முத்துக்குமார்(25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்தமுருகேஷ் மகன் நந்தகோபால்(21), ரெங்கசாமி மகன் கோபிநாதன்(24) ஆகியோருக்கும் இடையே உறவினர் திருமண வாழ்த்து போஸ்டர் ஒட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதில்ஆத்திரமடைந்த முத்துக்குமார், தங்கவேல் மகன் தனபால்(30), தங்கையன் மகன் ஜெய்சங்கர்(48) ஆகியோர் நந்தகோபால், கோபிநாதனை அடித்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியில் நந்தகோபால் இறந்தார். இதுபற்றி அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து நந்தகோபாலை கொலை செய்த 3 பேரையும் தேடி வருகின்றனர்.
கிரந்த எழுத்து பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர், ஜூன் 6-தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கிரந்த எழுத்துபயிற்சி வகுப்பு ஜூலை 6 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை பிற்பகலில் நடத்தப்பட உள்ளது. சமஸ்கிருதத்தில் பி.ஏ., சிரோமணி அல்லது எம்.ஏ., பட்டப்படிப்பு மேற்கொள்பவர்களும் மற்றும் வரலாறு, தமிழ் ஆகியவற்றில் பட்டப்படிப்பு மேற்கொள்பவர்களும் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ரூபாய் 100 மட்டும் பதிவு கட்டணமாக பயிற்சி தொடங்கும் போதுசெலுத்த வேண்டும். பயிற்சி வகுப்புகள் தினசரி பிற்பகல்2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். பயிற்சி வகுப்பில்சேருவதற்கான விண்ணப்பத்தினை, “இயக்குனர், சரசுவதிமகால் நூலகம், தஞ்சாவூர்- 9 என்ற முகவரிக்கு வரும் 30-ம்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் 9344698588 அணுகலாம் என ஆட்சிரும், சரசுவதி மகால் நூலக இயக்குநருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறை முகாம்
, ஜூன் 6-அரியலூர் வட்டம் அயன்சுத்தமல்லி, திருமானூர் கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டம் பிராஞ்சேரி,பிலிச்சிக்குழி மற்றும் செந்துறை வட்டம் மணக்குடையான்கிராமம், ஆண்டிமடம் வட்டம் மருதூர் கிராமத்திலும் வருவாய்த் துறை திட்ட முகாம் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதில்இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிசான்றிதழ் உள்ளிட்ட பொதுமக்களின் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.