tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை  ஆணை வழங்கல்

தஞ்சாவூர், ஜன.23- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் சார்-ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்ப ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடை பெற்றது. சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சாந்தகுமார் (பட்டுக் கோட்டை), ரமேஷ் (பேராவூரணி) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு மாத உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.  மேலும் கூட்டத்தில் மத்திய அரசின் அடையாள அட்டை முகாம் ஜன.27 முதல் 30 வரை அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலு வலகத்திலும் பதிவு செய்யப்படும் எனத் அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முரளி கிருஷ்ணன், செய லாளர் ஜலீல் முஹைதீன், பேராவூரணி ஒன்றிய தலைவர் வின்சென்ட் ஜெய ராஜ், செயலாளர் சுதாகரன், பட்டுக் கோட்டை ஒன்றிய செயலாளர் கே. கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;