tamilnadu

img

தஞ்சை, குடவாசலில் விவசாயிகள் கௌரவிப்பு

தஞ்சாவூர், மே 16- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் கோவிலூரில், வயல்வெளிகளில் பாடுபடும் விவசாயிகளைத் தேடிச் சென்று, கைத்தறி ஆடை அணிவித்தும், கரவொலி எழுப்பியும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கௌரவித்தனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, த.வி.ச தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், துணைத் தலைவர் முனியாண்டி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு, நூற்றுக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்க ளைப் பாராட்டி கைத்தறி ஆடை அணிவித்து, கரவொலி எழுப்பியும் கௌரவித்தனர்.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக உழவர்களுக்கு நன்றி தெரி விக்கும் நிகழ்ச்சி திட்டாணி முட்டம் வயல்வெளியில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி விவ சாயிகளுக்கு நன்றி தெரிவித்து அனை வரையும் பாராட்டி சால்வை அணிவித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் மற்றும் கட்சி கிளை செயலாளர் காமராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் முசிறியம், அம்மையப்பன், மணக்கால்-அய்யம்பேட்டை ஆகிய கிரா மங்களிலும் விவசாயிகளுக்கு நன்றி தெரி விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.