tamilnadu

img

பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 28- அனைத்து முகவர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும், முகவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மன்ற முகவர்களுக்கு நிபந்தனை கள் இல்லா முழு தளர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கோட்ட எல்ஐசி அலுவலகத்தின் வாயிலில் முகவர்கள் கருப்புப் பட்டை, கருப்பு முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கோட்டத் தலைவர் பி.தங்கமணி, மாநிலச் செயலாளர் நி.ராஜா, எல்ஐசி சிஏபி கிளை நிர்வாகிகள் புகழேந்தி, ரமேஷ், ஸ்ரீதர், தேசிகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.  பட்டுக்கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.பூவலிங்கம் கண்டன உரையாற்றினார். செயலாளர் என்.ராமலிங்கம், பொருளாளர் எம்.பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை கோட்டத்தில் மட்டும் சுமார் 25 இடங்களில் முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

;