கும்பகோணம், அக்.2- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கும்பகோணம் ஒன்றியம் பேரவைக் கூட்டம் திருநல்லூரில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் கே.குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொரு ளாளர் காமராஜ், ஒன்றிய துணைத் தலைவர் மேகநாதன், ஒன்றிய துணை செயலாளர் அசோக்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண் ணன், மாவட்டத் தலைவர் செந்தில் குமார், மாவட்ட துணைச் செயலாளர் என்.கணேசன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஜேசுதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செய லாளர் செல்வமணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். தேவனாஞ் சேரி, திருநல்லூர், குடிதாங்கி, கீழாத்து குறிச்சி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 2018-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளை பயனாளிகள் பட்டி யலில் உடனே வெளியிட வேண்டும். விலையை கூடிய விளைபொரு ளுக்கு கட்டுப்படியான விலை வழங்கிட வேண்டும். நெல் குவிண்டால் ஒன் றுக்கு ரூ.2500 வழங்கிட வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் விவ சாய கடன் வழங்க வேண்டும். 20 சத வீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள் முதல் செய்ய வேண்டும். கோவில் மடம் மற்றும் சமய நிலங்களில் குடி யிருப்போருக்கு சாகுபடி செய்பவர் களுக்கு நிலங்களைப் பெற்று சொந்த மாக்கிட வேண்டும். அனைத்து பாசன வாய்க்கால்களிலும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தூர்வாரும் பணிகளை துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.