tamilnadu

img

சிஐடியு 14-வது மாவட்ட மாநாடு வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம்

தஞ்சாவூர், மே 29-தொழிலாளர் உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்க அமைப்பான, சிஐடியு - தஞ்சாவூர் மாவட்ட 14-வது மாநாடு 2019 ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம் தஞ்சாவூர் பாலாஜிநகர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சிஐடியு மாவட்டத்தலைவர் து.கோவிந்தராஜூ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாநாடு, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதன் அவசியம்குறித்து, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்கமாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி, சிபிஎம் தஞ்சை ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 

வரவேற்பு குழு அமைப்பு
இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சைகோட்டத் தலைவரும், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான ஆர்.புண்ணியமூர்த்தி தலைவராகவும், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.செங்குட்டுவன் செயலாளராகவும், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ராஜாராமன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். வி.ச, விதொச,மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர்சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி நிர்வாகிகளை உள்ளடக் கிய மொத்தம் 51 பேர் கொண்ட மாவட்டமாநாட்டு வரவேற்பு குழு அமைக்கப் பட்டது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, வங்கி ஊழியர் சங்க செயல் தலைவர் சொக்கலிங்கம், தொலைத் தொடர்பு ஊழியர் சங்கசெயலாளர் சுப்பிரமணியன், மாணிக்கம், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமண்டல துணை தலைவர் பி.சத்தியநாதன் உட்பட பல தோழமை சங்கங்கள் கலந்து கொண்டன. சிஐடியு மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன் நன்றி கூறினார்.