tamilnadu

img

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு எதிராக வழக்கு... 

மும்பை 
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் அடுத்த மாதம் (செப்.,19) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

லகூ என்ற வழக்கறிஞர் தொடுத்துள்ள இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது," கொரோனா காரணமாக அனைத்து துறையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தினால் இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் ஐபிஎல் என்பது அறக்கட்டளை தொடர்பான நிகழ்வு கிடையாது என்பதால் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;