tamilnadu

img

மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ் அரையிறுதிக்குள் நுழைந்தார் ரபேல் நடால்

உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் 14வது முறையாக மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.


மொனாகோ நாட்டில் நடைபெற்றுவரும் சர்வதேச டென்னிஸ் தொடரான மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ்(Monte Carlo Masters) தொடரில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். காலிறுதியில் தனக்கு எதிராக விளையாடிய அர்ஜெண்டினா நாட்டு வீரரான குய்டோ பெல்லாவை 7-6 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் நடால் 14வது முறையாக மாண்டி கார்லோ தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.


ஏற்கனவே நடால் 11 முறை மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ் தொடரை வென்றுள்ளார். அரையிறுதியில் குரோசியாவின் பொர்னா கோரிக் அல்லது இத்தாலியின் ஃபேபியோ ஃபாக்னினி_யை சந்திக்கவுள்ளார்.


;