tamilnadu

31ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கருத்தரங்கம்

சேலம், ஜன.25- 31ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை  முன்னிட்டு சேலம் தெற்கு வட்டார போக்கு வரத்து அலுவலகம் சார்பில் கருத்தரங்கம் வெள்ளியன்று நடைபெற்றது.  தமிழகத்தில் 31ஆவது சாலை பாது காப்பு வாரம் ஜன.20ம் தேதி முதல் 27ம் தேதி  வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை யொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடைபெறுகின்றன. இதன்  ஒரு பகுதியாக சேலம் ஜங்சன் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் கருத்த ரங்கம் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் சேலம்  மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்  தாமோதரன் கலந்து கொண்டு பாதுகாப் பாக வாகனம் இயக்குவது குறித்து கல்லூரி  மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தார். மேலும் சாலை விதிகள் குறித்து மாணவர் களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த  நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து காவல்  அதிகாரிகள் உடனிருந்தனர்.  

;