tamilnadu

img

சேலம்: ஜவ்வரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் வந்த ஜவ்வரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை அடுத்துள்ள சதாசிவபுரத்தில் எஸ்.என்.கே எனும் ஜவ்வரிசி ஆலை இயங்கி வருகிறது. ஊரடங்கு உத்திரவை அடுத்து ஜவ்வரிசி ஆலை கடந்த வாரம் முதல் இயங்கி வருகிறது. 
இந்த நிலையில் கூலித்தொழிலாளியான கார்த்தி(21) சனிக்கிழமை பணியில் இருந்தபோது ஆலையின் கழிவுநீரில் இயற்கை எரிவாயு அமைக்கும் தொட்டியின் வால்வை திறக்க சென்றபோது தவறி தொட்டியில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற கார்த்தியின் பெரியப்பா ஆறுமுகமும்(45) தவறி விழுந்தார். இதையடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடைத்திற்கு வந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் இருவரின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை, ஆத்தூர் காவல் துணைக்காவல் கண்காணிப்பாளர் வி.ராஜூ ஆகியோர் சென்று விசாரித்து வருகின்றனர்.