tamilnadu

சேலம்- கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் பலத்த மழை

சேலம், மே 26-சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்துள்ளது. மேட்டூரை அடுத்தமாதையன் குட்டை பகுதியில் மின்கம்பத்தின்மீது மரம் விழுந்ததால் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளன. இதே போன்று ஏற்காடு சுற்றுலாத் தலத்தில்பெய்த மழையால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலும் கனமழை பெய்தது. புலிகள் காப்பகத்திலுள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.இதே போன்று கோவை காந்திபுரம், துடியலூர், கவுண்டம்பாளை யம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. வெப்பம் தணிந்ததாலும் குளிர்ச்சியான சூழலாலும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஓடியது. குளத்துக்காடு, எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு,சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சுற்றுவட்டாரப் பகுதி களில் மழை சூழ்ந்தது. இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைகள் மழையை வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர்.இதனிடையே, தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.