tamilnadu

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் பாட்மிட்டன் அரங்கம் திறப்பு

சேலம், ஜன. 30- சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் பாட்மிட்டன் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பாட்மின்டன் அரங்க தொடக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்டு அரங்கை திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொருவரும் மாணவப் பருவத்திலி ருந்தே தங்களை விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் சிக்கல்களை எளிதாக எதிர் கொள்ள முடியும் என்று கூறினார். இதன் பின்னர் 2019-2020ஆம் கல்வியாண்டில்  பல்வேறு  விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.  இவ்விழாவில் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் செய லாளரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் இணைத் தலைவருமான வழக்கறிஞர் த.சரவணன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் பேகம் பாத்திமா நன்றி கூறினார். இதில் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கர், வெங்கடேஸ் உள்ளிட்ட எராள மானோர் பங்கேற்றனர்.

;