இளம்பிள்ளை, அக்.26- சங்ககிரி அருகே பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின் சாரம் தாக்கியதில் பட்டாதாரி மாணவன் ஒருவர் சமபவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாய மடைந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பட்ட தாரி மாணவன் சம்பத்(22). இவர் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காலம் என்பதால் வேலை எதுவும் கிடைக்க வில்லை. இதனால், கடைகளுக்கு பிளக்ஸ் வைக்கும் தொழி லில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வந்தார். இந்நிலை யில், வெள்ளியன்று சங்ககிரி அருகேயுள்ள சின்னாகவுண்ட னூரில் பேக்கரி ஒன்றில் சம்பத், கார்த்திக், தங்கவேல் ஆகிய 3 பேரும் பிளக்ஸ் பேனர் விளம்பர பலகை வைக்கும் பணி யில் ஈடுபட்டனர்.
அப்போது, விளம்பரப்பலகை வைக்கும் இடத்தின் மேலே செல்லும் மின்சார கம்பியின் மீது பிளக்ஸ் பேனர் மோதியதில் மின்சாரம் தாக்கி சம்பத் (22) சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயம டைந்த கார்த்திக், தங்கவேல் ஆகிய இருவரும் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோத னைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.