ஏற்காடு, மார்ச் 2- ஏற்காட்டில் ஞாயிறன்று கான்கிரீட் ரெடிமிக்ஸ் லாரி கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைக்கிராமங்களில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு கான்கிரீட் ரெடிமிக்ஸ் ஏற்றி வந்த லாரி மஞ்சக்குட்டை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் சென்ற போடியை சேர்ந்த பெரி யசாமி மகன் கனேசன் (50) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். மேலும் லாரி ஓட்டுநர் இருதயசாமி மகன் சூர்யா ( 23), ராமர் மகன் ராம் குமார் (26), பாண்டியன் மகன் பிரகாஷ் (24) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர்.