சென்னை, ஜூன் 5-ஜெர்மனி உதவியுடன் 12 ஆயிரம் பேருந்துகள், 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.சென்னையில் போக்குவரத்துத்துறை செயல்பாடுகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை, கோவை, மதுரை போன்ற இடங் களில் முதல் கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் முக்கிய வழித் தடங்களில் சார்ஜிங் பாயின்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட் டுள்ளது என்றும் தமிழகத்தில் விரைவில் புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.