tamilnadu

img

15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை:
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் வெள்ளியன்று (ஜூலை 17)  ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போது, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது.இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் வெள்ளியன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மதுரை, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

;