சென்னை:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டியலினப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில்,”உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ராசுக்கு வர பாஜக அரசு விதித்த பல தடைகளை தகர்த்து ராகுலும், பிரியங்காவும் பயணம் செய்த காட்சிகள், 1977 ஆம் ஆண்டில் ஜனதா ஆட்சியில் பீகார் மாநிலம் பெல்ச்சியில் 11 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் கூற பல தடைகளை கடந்து இந்திரா காந்தி யானை மீது அமர்ந்து பயணம் செய்ததை நினைவு படுத்துகிறது”என்று கூறியுள்ளார்.அப்பாவி பெண்ணிற்கு நீதி கேட்கும் போராட்டம் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.