tamilnadu

img

எனது கடிதத்தை ஏற்று உத்தரவிட்ட ஜவுளித்துறை அமைச்சருக்கு நன்றி - சு. வெங்கடேசன் எம்.பி

தனது கடிதத்தை ஏற்று நடவடிக்கை எடுத்த ஜவுளித்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜவுளிக்குழுவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக ஜவுளிக்குழு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக எனக்கு 01.8.2019, 02.11.2019 ஆகிய தேதிகளில் மனு கொடுத்தனர். இதனடிப்படையில் ஜவுளிக்குழுவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி, நான் 07.09.2019 அன்று மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி ஜீபின் இராணி அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்.
எனது கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை 01.01.2016 முதல் அமல்படுத்தியதுடன், 01.10.2017 முதல் நிலுவைத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணை வழங்கிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜீபின் இராணி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

;