tamilnadu

img

ஆயுஸ் அமைச்சகத்தின் இந்தி திணிப்புக்கு வைகோ, வீரமணி கண்டனம்

சென்னை:
ஆயுர்வேதம் மருத்துவம் குறித்து ஆர்டிஐ மூலம் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் இந்தியில் விளக்கம் அளித்துள்ளது. இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆயுஷ் அமைச் சகம் இந்தியில் விளக்கம் அளித்தது கண்டிக்கத்தக்கது, மத்திய பாஜக அரசின் இந்தி ஆதிக்கத் திமிரைக் அடக்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

கி.வீரமணி அறிக்கை
மத்திய அரசின் நடவடிக்கை முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப் பும் செயல் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் இந்த எதிர்ப்புணர்வைத் திசை திருப்பிட, தமிழக பி.ஜே.பி. ‘சித்து வேலைகளில்’ ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் மயங்கக் கூடியவர்கள் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மக்கள் அல்ல என்று எச்சரிக்கிறோம். இந்தித் திணிப்பு வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல; பண்பாட்டு கலாச்சாரத் திணிப்பும் ஆகும் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.