சென்னை,ஜூலை 11 - மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வைகோ, தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதிமுக கூட்டணியில் வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசு ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என சட்டப் பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்தார். இதனையடுத்து, வைகோ உள்ளிட்ட திமுக அணியின் மூன்று உறுப்பினர்களும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, எம்எல்ஏ சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.