மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சென்னை, மார்ச் 25- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக பொருட் களை வழங்க விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் கீழ்பாக்கத்தி லுள்ள ஜெ. ஜெ. உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் அளிக்க லாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்க ளில் வெளியூர் செல்ல இருந்த 1,727 பயணிகள் மாநகராட்சியின் சமு தாயக் கூடங்களிலும், சென்னையி லுள்ள வீடற்றோர் ஏற்கனவே 1,454 நபர்களும். தற்பொழுது கூடுதலாக 610 நபர்கள் என மொத்தம் 2,064 நபர்கள் மாநகராட்சி காப்ப கங்களிலும் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியு டன் இணைந்து தங்களை ஈடு படுத்திக் கொள்ளவும். சமுதாய கூடங்கள் மற்றும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க ஆர்வமுள்ள தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகள் மாநகராட்சியின் www.chennai corporation.gov.in என்ற இணையதள முகவரியில் covid.19.Volunteers Registration&NGOs Registration என்ற இணைப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வும். தங்களால் வழங்கக்கூடிய உபகரணங்கள், உதவிப்பொருட்கள் மற்றும் பொருட்களின் விவரங்களை 044 - 25384530 என்ற 24 மணி நேரம் இயங்கக்கூடிய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கும்மாறும் ஏற்கன வே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நேர்வில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யவோ அல்லது பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்தவோ பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்திற்குள் 14.4.2020 வரை வருவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தன்னார்வ தொண்டு அமைப்பு கள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சானிட்டரி நாப்கின், சாம்பார், ரசம் பொடி போன்ற அத்தியாவசிய திடப் பொருட்கள், முகக் கவசங்கள். கிருமி நாசினி, கைகளை சுத்தம் செய்யும் சோப்பு திரவம் மற்றும் லைசால் ஆகிய பொருட்களை கீழ்பாக்கம், எண். 82/1, விளையாட்டு திடல் தெருவிலுள்ள ஜெ. ஜெ. உள்விளையாட்டு அரங்கத்திலும், அண்ணா நகர் கிழக்கு, ஏ பிளாக் 1ஆவது தெரு குமரன் நகரில் உள்ள அம்மா அரங்கத்திலும் வழங்கலாம். மேலும் நன்கொடை வழங்க விரும்புபவர்கள் பின்வரும் கணக்கு குறியீட்டு எண்ணில் அல்லது காசோலை மூலம் “THE COMMISS IONER, GREATER CHENNAI CORPORATION” என்ற பெயரிலும் செலுத்துமாறும், மேலும், இது தொடர்பான விவரங்கள் அறிய 044 - 25384530 எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பணம் செலுத்த வேண்டிய முகவரி
தி ஆணையர், சென்னை பெருமாநகராட்சி, ஐசிஐசிஐ வங்கி, நுங்கம்பாக்கம் கிளை, வங்கிக் கணக்கு எண்: 000901126630, எம்.ஐ.சி.ஆர். எண்: 600229003, ஐஎப்எஸ்சி கோட்: ஐசிஐசி0000009. இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.