tamilnadu

img

நாவலூரில் நாளை முதல் சுங்கக் கட்டணம் ரத்து!

நாவலூரில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை நாவலூர் சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘கள ஆய்வு முதலமைச்சர்’ எனும் ஆய்வுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து ஆய்வு செய்தனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.