tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வால் இறந்த மாணவிகளின் குடும்பத்திற்கு 50 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் 8) மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் ப.ஆறுமுகம், பொருளாளர் சுசீந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

**************

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்,  மரணமடைந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் முன்பு சனிக்கிழமையன்று (ஜூன்8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  விஜய் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பி.சரவணத்தமிழன், பொருளாளர் எஸ்.மஞ்சுளா , துணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

***************

நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தின் சார்பில் மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் செந்தமிழன்,  செயலாளர் தமிழ் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.