செங்கல்பட்டு,நவ.28- காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாய லூர் பாலாற்றின் முகத்து வாரம் அருகே அணுசக்தி த்துறை நிதி ஆதாரத்தோடு ரூ.32.90 கோடி செலவில் தடுப்புச்சுவர் அமைக்க ப்பட்டுள்ளது. இதேபோல், திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் பாலாற்றின் குறுக்கே தமிழக அரசு சார்பில் ரூ.30.50 கோடி செலவில் 14 கதவணை களுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டதால் தடுப்பணைகளில் 5 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா வெள்ளி யன்று (நவ. 29) நடை பெறுகிறது. இதில் செங்க ல்பட்டு பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் காணொ ளிக் காட்சி மூலம் தடுப்பணை களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.