tamilnadu

img

தமுஎகச தலைவர்,  கவிஞர் ஜீவி-க்கு தமிழ்ச் செம்மல் விருது...

புதுக்கோட்டை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர்களில் ஒருவரான கவிஞர் ஜீவிக்கு தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல் விருது’ கிடைத்துள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கவிஞர் ஜீவி. வானம் தொலைந்து விடவில்லை, நைலன் ஊஞ்சால், இருவேறு முகங்கள், அடித்துப் பெய்த மழை, ஜீவி கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.தொடர்ந்து பல்வேறு இதழ்களில் கவிதைகளை எழுதி வருகிறார். தமிழகம் அறிந்த இலக்கியச் சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர். பல்வேறு விருதுகளை யும், பரிசுகளையும் பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்பொழுது தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு இலக்கிய அமைப்புகள், இலக்கிய ஆளுமைகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

;