tamilnadu

ரூ.12845 கோடிக்கு துணை மதிப்பீடுகள்

சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் ரூ.12845 கோடிக்கு துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்தார்.அதன் விபரம் வருமாறு:-

இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் தொற்று அனைவரையும் பாதித்து உள்ளது. இந்த ஆண்டு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சுகாதார வசதி
கள் வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்குதல், பொது வினியோக அமைப்பின் மூலம் கூடுதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் அதற்கு உண்டான நிர்வாக செலவுகள் ஆகிய இடங்களில் பெருமளவில் கூடுதல் செலவினங்களை மாநில அரசு செய்துள்ளது.

ஆகவே இந்த ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகளின் அளவு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகவே உள்ளது. கொரோனா கட்டுப்பாடு தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு துணை மானிய கோரிக்கையில் மொத்தம் 9,027.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புது பணிகள் மற்றும் பொது துணை பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவது எதிர்பாரா செலவுகள் நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அதற்கு ஈடு செய்யவும் இந்த துணை மானிய கோரிக்கையின் நோக்கமாகும்.வைரஸ் தொற்றினால் பொது விநியோக அமைப்பு மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட் களை இலவசமாக வழங்குதல் மற்றும் பொது விநியோக கடைகளிலிருந்து வழக்கத்திற்கு அதிகமாக பொருட்கள் விற்கப்படும் 3,359.12 கோடி ரூபாய் கூடுதல் துணை மதிப்பீடுகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்பதும் சேர்க்கப் பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று நிவாரண உதவியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கு ரொக்கப் பணம் உதவியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்காக அரசு 3,168 64 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது இதை தவிர கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக 1049.56 ரூபாய் என மொத்தம் 4,218.20 கோடி ரூபாய் இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் கணிப்பு என்பது இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.

1,109 .42 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீடாக தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறைக்கு வைரஸ் தொற்று மருந்துகள் ஆர்டிபிசிஆர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் கண்டறியும் சாதனங்கள் கொள்வதற்காகவும் நோயாளிகளுக்கான உணவு செலவுகளுக்காகவும் ஹாஜிகள் வசதி கொண்ட படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதாரத்துறை நிறுவனங்களில் உள்ள மருத்துவ சேவை அவசர ஊர்தி வசதிகளை மேம்படுத்துவதற்காக மதிப்பீடுகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் என்பதன் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலைக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்கு ஏதுவாக மின் உற்பத்திக்கான நிலுவை தொகைகளை வழிவகையும் முன்பணமாக அரசு 170.28 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது.திருப்பத்தூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்காகவும் பல்வேறு இடங்களில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 86 வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டுவதற்கு புதிய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்கு அரசு 645.26 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது.இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.