tamilnadu

img

புதைகுழியில் தள்ளப்பட்ட சிறு குறு நடுத்தர தொழில்கள் தொழில்முனைவோர் கண்ணீர்

தொழில்முனைவோர் கண்ணீர்

சென்னை, ஏப். 23- எம்எஸ்எம்இ என்று அழைக்கப்படும் சிறு,  குறு நடுத்தர தொழில்கள் சில ஆண்டுகளாக முன்பாகவே தரையில் தள்ளப்பட்டு, தற்போது  புதை குழியில் தள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் சிறு, குறு, நடுத்தர  தொழில்கள் முடங்கியுள்ளன. இதில் பணி யாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் வங்கிக்கடனை வாங்கி  தொழிலை தொடங்கிய ஏராளமான தொழில் முனைவோரும் நொடிந்துபோயுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் (சாடியா) ஒருங்கிணைப்பாளர் கே.கிருஷ்ணசாமி கூறு கையில்,  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல ஆயிரக்கணக்கான சிறு, குறுந்  தொழில் மூடப்பட்டு, 5 லட்சத்திற்கும் மேற்பட் டோர்  வேலையிழந்து நடுத்தெருக்கு வந்த நிலை யில், கொரோனா பெருந்தொற்று பரவாமல் இருக்க அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக, அரசு இந்த தொழில்களை பாது காக்க எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில்  நாங்களும், எங்களுடன் உள்ள தொழிலாளர்க ளும் வாழ வழியின்றி நிர்க்கதியாக உள்ளோம்.

தற்போது அரசு 20.4.2020இல் இருந்து  சிவப்பு மண்டல பகுதியாக 21 மாவட்டங்களை யும், 7 மாவட்டங்களை ஆரஞ்சு மாவட்டங்களாக வும், 6 மாவட்டங்களை மஞ்சள், பச்சை என  அறிவித்துள்ளனர். இதில் சிவப்பு மண்ட லத்திற்குட்பட்ட மாவட்டத்தில் தொழில் தொடங்கக் கூடாது. ஆரஞ்சு, மஞ்சள் மாவட்  டங்களில் அதாவது 13 மாவட்டத்தில் மட்டுமே  அரசு கண்காணிப்பு அடிப்படையில் தொழில் களை தொடங்கலாம். தொழிற்பேட்டை  மற்றும்  ஊரகப் பகுதியிலும் தொழில் தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

சிவப்பு மண்டல பகுதியான 21 மாவட்டத்தி லும் மிக விரைவில் நிலைமை சீராகி தொழில்  தொடங்கலாம் என்று அரசு அறிவிக்கும் என்றே நம்புகிறோம். சமூகத்தில் தொழில்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பினையப்பட்டது.. போக்கு வரத்து இல்லாமல் தொழில் செய்ய இயலாது. பொருட்கள் வாங்க கடைகள் இல்லாமல் தொழில் செய்ய இயலாது உணவுக் கடைகள் இல்லாமல் தொழில் செய்ய இயலாது. சரக்கு  வாகனம் இல்லாமலும் தொழில் செய்ய இய லாது. அனைத்து பகுதியும் சீராகும் வரை இந்த 13 மாவட்டத்தில் தொழில் தொடங்க கடின மானதே என்பதை அரசு நன்கு உணரும்.

கோரிக்கைகள்

பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், ஏற்றமதியில் பெரிய அளவில் பங்க ளிக்கும் சிறு, குறுந் தொழிலுக்கு அரசு உடனடி யாக சலுகையுடன் கூடிய நிதி பங்களிப்பை அளிக்க வேண்டும்.

சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் முனை வோரின் வாழ்வாதரத்தை பாதுகாத்திடவும், அவர்களை நம்பியிருக்கும் தொழிலா ளர்களை பதுகாத்திடவும் உடனடியாக இந்த  சூழ்நிலையிலயே நிதி ஆதாரத்தை உயர்த்தி னால்தான், தொழில் தொடங்கும்போது ஓரளவு  பழைய நிலைமையில் இருந்து தொழில் தொடங்க முடியும்.

அரசு உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?

சிறு மற்றும் குறுந் தொழில் முனை வோருக்கு குறைந்தபட்சம் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்திலிருந்து ரூ.  5 லட்சம் வரையிலும், சிறு  நிறுவனத்திற்கு  ரூ. 5 லட்சத்திலிருந்து 10 லட்சம்  வரையிலும், நடுத்தர நிறுவனத்திற்கு  வங்கி யில் மூன்றாண்டுக்கான டர்ன் ஓவர்  அடிப்ப டையில் நிதி வழங்கலாம். அதை 12 மாத  தவணையாக,  6 மாதம் கழித்து வட்டியில்லா மல் வங்கியிலேயே பிடித்தம் செய்து கொள்ள லாம். அப்படி செய்தால் புதியதாகவும், உற்சாக மாக தொழில் தொடங்க முடியும்.

இயந்திரங்களுக்காக வாங்கிய டேர்ம் லோனையும், வட்டியையும் மானிட்டோரியம் (Monitoriam) காலத்தை ஒரு ஆண்டு கழித்து  பிடித்தம் செய்ய வேண்டும்.

Working capital - பொருள் விற்ற 20 நாட்க  ளுக்குள் தற்போது ஜி.எஸ்.டி கட்ட வேண்டி யுள்ளதால், பொருள் வாங்குவதற்கான கடனை  ஒரு ஆண்டிற்கு 6 விழுக்காடு வட்டியாக குறைத்திட வேண்டும்.

இ.எஸ்.ஐ. மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை அரசே 6 மாதத்திற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். படிவம் மட்டும்  பூர்த்தி செய்து நிறுவனங்கள் அணுப்பலாம். மின்சார கட்டணத்தை ஒரு ஆண்டிற்கு 25  விழுக்காடு குறைத்திட வேண்டும்.  சொத்துவரி மற்றும் தொழில் வரி ஆகியவற்றிற்கு 1 ஆண்டிற்கு சலுகை அளிக்க வேண்டும்.

வங்கியில் டாக்குமண்டு கட்டணம், கேரண்  டிக்கான கமிஷன் கட்டணம் ஆகியவற்றிற்கு ஒரு ஆண்டிற்கு சலுகை அளிக்க வேண்டும்.  தற்போதுள்ள நிலமையில் பணபரிவர்த்த னையே இல்லா சூழலில், அரசு கவனத்தில் கொண்டு இ.எஸ்.ஐ. மற்றும் வருங்கால வைப்பு  நிதியில் உள்ள 1லட்சம் கோடி மேலாக உள்ள பணத்தை பயன்படுத்தி சிறு மற்றும் குறுந் தொழில்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக  மட்டுமே சிறுகுறு, நடுத்தரத் தொழில்களையும் அவற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களையும்  பாதுகாக்கமுடியும்.

நிறுவனமே இயங்காதபோது மின் கட்டணத்தை எப்படி செலுத்துவது?

அயப்பாக்கம் பகுதியில் அட்டை நிறுவனம்  நடத்தி வரும் என்.நாகூர்கனி என்பவர் கூறுகை யில், எங்களுடை நிறுவனத்தில் 20 தொழி லாளர்கள் வேலை செய்கிறார்கள். ஏற்கனவே சென்னை வெள்ளம், பணமதிப்பு இழப்பு நட வடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றால் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக அரசு  கடந்த மார்ச் 24ஆம் தேதியில் இருந்து 144  தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் நிறுவ னங்களை மூடி விட்டோம்.

 இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என அரசு உத்தர விட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் அனுப்பிய பொருட்களுக்கு இந்த காலகட்டத்தில் யாரும்  பணம் வழங்கப் போவதில்லை. மேலும் வங்கி யிலும் நாங்கள் செலுத்த வேண்டிய மாதத் தவனைகளை பிடித்தம் செய்கிறார்கள்.

நிறுவனமே இயங்கவில்லை. ஆனால் மின்சார வாரியம் பிப்ரவரி மாத பில் தொகை யான 58 ஆயிரம் ரூபாயை தற்போது செலுத்தச்  சொல்கிறார்கள். நிறுவனமே இயங்கவில்லை எப்படி மின்சார கட்டணத்தை செலுத்துவது, வங்கியில் எப்படி மாதத் தவனை தொகையை செலுத்துவது, தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிப்பது.

எனவே அரசு வங்கியில் செலுத்த வேண்டிய  மாதத் தவனைக்கு 6 மாதம் விலக்கு அளித்து,  வட்டியை ரத்து செய்ய வேண்டும். தொழிலா ளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் 50 விழுக் காடு ஊதியத்தை அரசே ஏற்க வேண்டும். மின்  கட்டணத்தை நிலைமை சீரான பிறகு வசூ லிக்க வேண்டும். இல்லையென்றால் தடை உத்த ரவு காலம் முடிந்த பிறகும் கூட இதுபோன்ற சிறு நிறுவனங்களை இயக்குவதே கடினமாக மாறிவிடும் என்றார்.

-அம்பத்தூர் ராமு