தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், பெ.கண்ணன், பி.செல்வன், கே.கே.வெங்கடேசன், சிவாஜி, சி.எ.செல்வம், உதயகுமார், பாலமுருகன், அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
**********************
தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேலூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை ஜூடோ ரத்தினம் துவக்கி வைத்தார்.
*********************
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் தொடங்கி வைத்தார். வட்டச் செயலாளர் என்.எஸ் அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.