திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகத்தை கண்டித்தும், உற்பத்தியாகும் முழு பாலையும் கொள்முதல் செய்யக் கோரியும் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் பால் கூட்டுறவு அலுவலகத்தை மாவட்ட அமைப்பாளர் டி.கே.வெங்கடேசன் தலைமையில் வெள்ளியன்று (ஆக. 14) முற்றுகையிட்டனர். அப்போது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மொத்த பாலையும், தினசரி கொள்முதல் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.