tamilnadu

பண்ணை பசுமைக் கடைகளில் ரூ.30 க்கு வெங்காயம் விற்பனை

தை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினமும் 650 லாரிகளில் 7,000 டன் காய்கறிகள் வருகின்றன.

தினமும் 60 சரக்கு வாகனங்களில் வெங்கா யம் வருகிறது. இந்த நிலையில், வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறைவான வெங்காயமே மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் சில கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.100ஐ எட்டியுள்ளது

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவுத் துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் நவ.6 முதல் வெங்காயம் ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலையேற்றம் தற்காலிகமானதே விரைவில் வெங்காயம் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படும் என்றும் தேவைக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வெங்காயம் விற்பனை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.