tamilnadu

img

செப்.5 500 மையங்களில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கருத்தரங்கம் விடுத்துள்ள அறைகூவலின்படி செப்.5 அன்று தமிழகத்தில் 500 மையங்களில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்படும் 5 கோரிக்கைகள் இவை:

1.அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய மதச்சார்பின்மை, ஜனநாயக கட்டமைப்பு, சமூக நீதி, தனிநபர் உரிமைகளை பறிக்காதே;   

2. காஷ்மீரத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்கிடு. காஷ்மீரில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறைகளிலும், வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்க;  

3.சிஏஏ,என்பிஆர்,என் ஆர் சி-யை ரத்து செய்.போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிடு, கைது செய்யப்பட்டு சிறையிலிருப்போரை விடுதலை செய்க; 

4. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் கல்வி வாய்ப்பு, உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வாபஸ் வாங்கு;  

5. தமிழக சிறைச்சாலைகளில் தண்டனை காலம் முடிந்ததும், விசாரணையின்றியும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்க.